News Just In

5/14/2021 01:22:00 PM

வெறிச்சோடி காணப்படும் காத்தான்குடி - சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இஸ்லாமியர்கள் வீடுகளில் பெருநாள் கொண்டாட்டத்தில்...!!


கொவிட் 19 தொற்றுப் பரவல் அதிகரித்து காணப்படும் இச்சூழலில் இன்று உலகொங்கும் வாழும் இஸ்லாமிய மக்கள் தங்களது ஈகைப் பெருநாள் தினத்தை வழமைக்கு மாறாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கொண்டாடிவருகின்றனர்.

அதே போன்று எமது நாட்டிலும் கொவிட் 19 தொற்று அதிகமாக பரவிவரும் நிலையில் அரசினால் விதிக்கப்பட்டுள்ள சட்ட திட்டங்களை மதித்து தங்களது இல்லங்களிலேய சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்த வகையில் காத்தான்குடி பிரதேசத்தின் பிரதான வீதி உட்பட சில உள்ளக வீதிகளும் இவ்வாறு வெறிச்சோடி காட்சியளிக்கப்பட்டதோடு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





No comments: