இலங்கையில் இன்று புனித நோன்புப்பெருநாளை முஸ்லிங்கள் கொண்டாடிவரும் நிலையில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்கள் அடங்கலாக அம்பாறை மாவட்டம் முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு, ஆள் நடமாற்றங்கள் இல்லாமல் விரைத்தோடிய நிலையில் சகல ஊர்களும் காணப்படுகிறது. கொரோனா அலையின் தாக்கம் காரணமாக அரசினால் விடுக்கப்பட்ட அறிவித்தலை அடுத்து ஸ்தம்பிக்கப்பட்ட நிலையில் முஸ்லிங்கள் புனித நோன்புப்பெருநாளை இன்று கொண்டாடி வருகிறார்கள்.
பாதுகாப்பு படையினரும், பொலிஸாரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், வீதியால் செல்பவர்கள் நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன் சுகாதார நடவடிக்கைகளையும் மிகவும் இறுக்கமாக கடைப்பிடிக்க வலியுறுத்தி வருவதை காணக்கூடியதாக உள்ளத்துடன் பள்ளிவாசல்கள் அடங்களாக சகல மத அனுஷ்டான இடங்களும், கடற்கரை தங்குமிட பிரதேசங்கள், பூங்காக்கள், பூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments: