News Just In

5/14/2021 12:23:00 PM

மண்சரிவு காரணமாக மண்மேட்டில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு...!!


நேற்று இடம்பெற்ற மண்சரிவு காரணமாக வரகாபொல கஸ்னேவ பிரதேசத்தில் மண்மேட்டில் சிக்கி இருந்த இரண்டு பேரை இராணுவத்தினர் மீட்டிருந்தனர்.
எனினும், அதில் ஒருவர் உயிரிழந்திருந்ததாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

இதன்போது, உயிரிந்த நபரின் தாய் உயிருடன் மீட்கப்பட்டு வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் வரகாபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ருவான்வெல்ல மாயின்நொலுவ பிரதேசத்தில குடா ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கில் நான்கு குடும்பங்களை சேர்ந்த 13 பேர் சிக்கியிருந்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் இன்று காலை அவர்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: