மட்டக்களப்பு- கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் குரங்குகளின் அட்டாசகம் அதிகரித்துள்ள நிலையில் வாழைச்சேனை ஹைறாத் வீதியில் வீடு ஒன்றினை சேதப்படுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பிரதேசத்தில் சில மாதங்களாக குரங்குகளில் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் பிரதேசத்தில் காணப்படும் பயன்தரும் மரங்கள் மற்றும் வீட்டு கூரைகள் என்பவற்றை சேதப்படுத்தி வருகின்றது.
இவை தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதுடன், சில சொத்துக்களும் சேதமாக்கப்பட்டு வருவதுடன், சிலருக்கு காயங்களும் ஏற்பட்டு வருவதாகவும் மக்கள் கவலை தெரிவின்கின்றனர்.
குறித்த பகுதியில் குரங்குகளின் வருகை மீண்டும் தொடங்கிய நிலையில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. இதனால் குறித்த வீட்டின் கூரையை உடைத்து வீட்டினுள் காணப்படும் பொருட்களை சேதப்படுத்தி உள்ளதுடன், வீட்டில் இருந்தவர்களை தாக்க முற்பட்டதாகவும், இதனால் தாங்கள் வெளியில் ஓடி விட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
எனவே வாழைச்சேனை பிரதேசத்தில் தொடர்ச்சியாக குரங்குகளில் வருகை இடம்பெற்று வருவதால் மக்களின் பாதுகாப்பு கருதியும், குரங்குகளின் உயிரை பாதுகாக்கும் வகையிலும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
வாழைச்சேனை பிரதேசத்தில் சில மாதங்களாக குரங்குகளில் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் பிரதேசத்தில் காணப்படும் பயன்தரும் மரங்கள் மற்றும் வீட்டு கூரைகள் என்பவற்றை சேதப்படுத்தி வருகின்றது.
இவை தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதுடன், சில சொத்துக்களும் சேதமாக்கப்பட்டு வருவதுடன், சிலருக்கு காயங்களும் ஏற்பட்டு வருவதாகவும் மக்கள் கவலை தெரிவின்கின்றனர்.
குறித்த பகுதியில் குரங்குகளின் வருகை மீண்டும் தொடங்கிய நிலையில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. இதனால் குறித்த வீட்டின் கூரையை உடைத்து வீட்டினுள் காணப்படும் பொருட்களை சேதப்படுத்தி உள்ளதுடன், வீட்டில் இருந்தவர்களை தாக்க முற்பட்டதாகவும், இதனால் தாங்கள் வெளியில் ஓடி விட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
எனவே வாழைச்சேனை பிரதேசத்தில் தொடர்ச்சியாக குரங்குகளில் வருகை இடம்பெற்று வருவதால் மக்களின் பாதுகாப்பு கருதியும், குரங்குகளின் உயிரை பாதுகாக்கும் வகையிலும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.











No comments: