News Just In

5/08/2021 09:14:00 PM

கொரோனா நோய் தொற்றாளர்களுக்கு வீட்டின் உள்ளேயே சிகிச்சை அளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை...!!


கொரோனா நோய் அறிகுறிகள் தென்படாத கொவிட் தொற்றாளர்களுக்கு அவர்களது வீட்டின் உள்ளேயே சிகிச்சை அளிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதேபோல, நோயாளிகளின் பராமரிப்பு குறித்த முறையான திட்டம் ஒன்றை அரசாங்கம் செயல்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வீட்டில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகள் உள்ளனர். குறிப்பாக கடுமையான அறிகுறிகள் இல்லாத நோயாளிகள். அவர்களுக்கு வைத்தியசாலை வசதிகளை வழங்குவதற்காக நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மேலும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பொருத்தமான தடுப்பூசி குறித்தும் பரிசீலித்து வருவதாக இராஜாங்க அமைச்சு தெரிவித்தார்.

No comments: