News Just In

5/26/2021 10:45:00 AM

விபத்தில் சிக்கி முழங்காவில் கிராம சேவகரும் அவருடைய மனைவியும் உயிரிழப்பு!!


பூநகரி – பல்லவராயன்கட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முழங்காவில் கிராம சேவகரும் அவருடைய மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் முழங்காவில் பகுதி கிராம சேவகர் பாலசிங்கம் நகுலேஸ்வரன் (வயது48) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கிராம சேவகரின் மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் உயிரிழந்துள்ளார். சாவகச்சோிக்கு வந்துவிட்டு வீடு திரும்பும்போதே விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments: