News Just In

5/16/2021 07:16:00 AM

பயணக்கட்டுப்பாட்டை மீறுவோர் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்...!!


இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் தமது பொறுப்பினை உரிய வகையில் நிறைவேற்ற வேண்டுமென பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் தற்சமயம் அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை பொலிசார் கண்காணித்து வருகின்றனர். அதனை மீறுவோர் தொடர்பில் '1997' என்ற தொலைபேசி இலக்கத்திற்குப் பொலிசாருக்கு அறியத் தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments: