News Just In

5/11/2021 06:30:00 PM

மட்டக்களப்பில் மாலை 6 மணியுடன் வர்த்தக நிலையங்களை மூடத் தீர்மானம்- அரசாங்க அதிபர் தெரிவிப்பு!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்தியாவசிய விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களை மாலை 06மணியுடன் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கொரனா செயலணி கூட்டத்தினை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வருபவர்களையும் இங்கிருந்து செல்பவர்கள் தொடர்பில் அத்தியாவசிய சேவை தவிர்ந்து ஏனையவர்களை அனுமதிப்பதில்லையெனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தர்.

No comments: