News Just In

5/02/2021 04:09:00 PM

சாய்ந்தமருது, காரைதீவு வைத்தியசாலைகளில் கோவிட் 19 தடுப்பூசியின் இரண்டாம் கட்டம் வழங்கும் நிகழ்வு!!



நூருல் ஹுதா உமர்
கோவிட் 19 தடுப்பூசியின் இரண்டாம் கட்டம் வழங்கும் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் ஆலோசனையுடன் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தலைமையில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ரி.எஸ்.ஆர்.ரி.றஜாப், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் சனூஸ் காரியப்பர், டெங்கு மலேரியா தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் நௌசாத், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் ஜீவராணி சிவசுப்ரமணியம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு தடுப்பூசியினை பெற்றுக் கொண்டனர்.

மேலும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீரின் தலைமையில் காரைதீவு வைத்தியசாலையில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர், பொதுச்சுகாதார பரிசோதகர், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோத்தர்கள், ஊழியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசியின் இரண்டாம் கட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.












No comments: