News Just In

5/25/2021 05:03:00 PM

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் திடீர் அன்டிஜன் பரிசோதனை- 04 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!


(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், முதலாவது கொரோனா மரணம் நேற்று திங்கட்கிழமை மாலை அடையாளம் செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் வெளிநபர்கள் இருபத்தி ஐந்து பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மீன்பிடித் துறைமுகத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கும், வெளி நபர்கள் மூவரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முதலாவது கொரோனா மரணம் இடம்பெற்ற நிலையில் மரணித்த ஓய்வுபெற்ற 63 வயதுடைய பெண் வைத்தியரின் முதலாவது நேரடி தொடர்புடையவர்கள் பதினாறு பேருக்கு பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது, இதன் மாதிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.

குறித்த பி.சீ.ஆர். பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படும் நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி தொடரச்சியாக பி.சீ.ஆர். பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் என்பன இடம்பெற்று வருகின்றது.









No comments: