News Just In

4/07/2021 03:05:00 PM

பாம் எண்ணெய் இறக்குமதி தொடர்பில் விசேட அனுமதிப் பத்திரம் வழங்க நடவடிக்கை- வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன!!


பேக்கரி உற்பத்தி பொருட்களுக்காக பாம் எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பில் விசேட அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பாம் எண்ணெய் இறக்குமதி தொடர்பில் விசேட அனுமதிப் பத்திர நடைமுறையொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உடன் அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடை செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதற்கு அமைவான வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுமாறு ஜனாதிபதியின் செயலாளரினால் ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: