மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பிரிவினால் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பதவி நிலை உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தின் சமகால போக்கு "CIoud Transformation in the Government sectors" எனும் முழு நாள் பயிற்சி செயலமர்வானது, இன்று 23.04.2021 வெள்ளிக்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த செயலமர்வில் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், நிருவாக உத்தியோத்தர்கள், மேலதிக மாவட்ட பதிவாளர்கள் அடங்கலாக மேலும் பல பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த செயலமர்விற்கு வளவாளராக "வற் சோல்" நிறுவனத்தின் வளவாளரான விக்னராஜ் மனோகரராஜா கலந்துகொண்டு சிறப்பான முறையில் வளவாண்மையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: