News Just In

4/23/2021 10:57:00 AM

நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் மரணங்கள் - மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 634 ஆக உயர்வு!!


நாட்டில் மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவானமையை அடுத்து மரணித்தவர்களின் எண்ணிக்கை 634 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவர் கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ந நிலையில் கடந்த 20ஆம் திகதி மரணித்தார்.

இதய நோய் நிலைமையுடன் மோசமடைந்த கொவிட் நியூமோனியா நிலை காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கண்டியைச் சேர்ந்த 63 வயதான ஆண் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் கடந்த 22ஆம் திகதி மரணித்தார்.

கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவருக்கு தொற்றுறுதியானமையை அடுத்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் மரணித்தார்.

நாட்பட்ட ஈரல் நோய், நுரையீரல் நோய் மற்றும் கொவிட் நியூமோனியா நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேலியகொடை பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவர் இத்தாபான மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 20ஆம் திகதி மரணித்தார்.

கொவிட் நியூமோனியா நிலைமை காரணமாக அவர் மரணித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டமுல்ல பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் கடந்த 21ஆம் திகதி மரணித்தார்.

மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமையை அடுத்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் மரணித்தார்.

கொவிட் நியூமோனியா, நீரிழிவு, நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமை மற்றும் இதயநோய் நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்த 77 வயதான பெண் ஒருவர் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் நேற்று மரணித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு தொற்றுறுதியானமையை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் மரணித்தார்.

இதய நோய் மற்றும் கொவிட் நியூமோனியா நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: