News Just In

3/24/2021 12:05:00 PM

நாளை துக்க தினமாக பிரகடனம்- துபானசாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு...!!


கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் இறைச்சிக் கடைகளும் நாளை 25 ஆம் திகதி வியாழக்கிழமை மூடப்படவுள்ளன.

நாளை 25 ஆம் திகதி வியாழக்கிழமையை துக்க தினமாக பிரகடனப்படுத்த அமைச்சரவையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரரின் இறுதி கிரியைகள் நாளையதினம் இடம்பெறவுள்ளதால், அன்றையதினத்தை துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் இறைச்சிக் கடைகளும் நாளை 25 ஆம் திகதி வியாழக்கிழமை மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: