News Just In

3/24/2021 11:53:00 AM

மண் அகற்றும் இயந்திரம் குடை சாய்ந்து கோர விபத்து- 22 வயது சாரதி ஸ்தலத்திலேயே பலி!!


கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை பொல்பிட்டிய விகாரைக்கு அண்மையில் சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் மண் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த குறித்த இயந்திரம் குடைசாய்ந்து அதன் சாரதி ஸ்தலத்திலேயே பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று (24) காலை சுமார் 7.00 மணி அளவில் இடம் பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அதிசக்தி வாய்ந்த மின் இணைப்பு பணிக்காக சென்று கொண்டிருக்கும் போது குறித்த மண் அகற்றும் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தடுப்பு கட்டை செயலிழந்துள்ளது.

அதனால் குறித்த ஏந்திரம் பின்னோக்கி இழுத்துச் செல்லும் போது சாரதி பாய்ந்துள்ளதாகவும் அவர் பாய்ந்த பக்கத்திலேயே எந்திரம் குடை சாய்ந்ததில் அதில் அகப்பட்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.





No comments: