News Just In

3/20/2021 09:54:00 AM

வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மேலும் சிலர் நாட்டினை வந்தடைந்தனர்!!


கொரோனா பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த ஆயிரத்து 262 இலங்கையர்கள், கடந்த 24 மணித்தியாலங்களில் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவின் சென்னையிலிருந்து 235 பேரும், துபாயிலிருந்து 109 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள் அனைவரும், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று இந்த காலப்பகுதியில் வெளிநாடுகளுக்கு புறப்பட்ட 15 விமானங்களில் 655 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

விமானத்தில் பயணித்தவர்களில் 110 பேர் கட்டாருக்கும், 95 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவுக்கும் சென்றுள்ளனர்.

இந்த காலகட்டத்தில், உக்ரைன் மற்றும் இங்கிலாந்திலிருந்து 111 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

No comments: