வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமோட்டை வீதியில் 80 ஏக்கருக்கு அதிகமான காடு அழிக்கட்டு வருகிறது!
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமோட்டை வீதியில் மாதர்பணிக்க மகிழம் குளத்தின் காட்டுப்பகுதியில் தனி நபர் ஒருவர் 80 ஏக்கருக்கு அதிகமான காடு அழிக்கட்டு வருகிறது.
இது தொடர்பாக கிராம மக்கள் பலமுறை வவுனியா மாவட்ட வனவள திணைக்களம் மற்றும் வனவள திணைக்களத்தின் உயர் பீ டத்துக்கும் அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
ஒரு தனி மனிதனுக்கு ஏன் இவ்வளவு காணி? அவர் இவ்வாறு காடுகளை வெட்டி துப்புரவு செய்து பின்னர் அந்த காணிகளை பல லட்சம் பணத்திற்கு விற்பனை செய்துவிட்டு சென்றுவிடுவார்
குறித்த காடு அழிப்புக்கு வனவள உத்தியோகத்தர்கள் கையுட்டல்கள் வாங்கிகொண்டு அவருக்கு சார்பாக நடந்துகொள்ளமுடுயும் என கிராமமக்கள் விஷனம் தெறித்துவருகிறார்கள்.
குறித்த இடத்தில் அதிகாலை இரவு என்றும் பாராமல் இன்றும் JCP வேலை செய்த வண்ணமும் தினமும் மரங்கள் வெட்டப்படுவதும் நடந்த வண்ணம் தான் உள்ளது.
இவற்றை யார் தடுத்து நிறுத்துவது?
No comments: