News Just In

3/16/2021 12:28:00 PM

மட்டக்களப்பு- வெல்லாவெளி பிரதேசத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்- 2021


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், இராஜாங்க அமைச்சரும் வெல்லாவெளி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் வெல்லாவெளியில் திங்கட்கிழமை 15.03.2021 இடம்பெற்றது.

இதன்போது கடந்த ஆண்டு இப்பிரதேச செயலகப்பிரிவில் மெற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக அனுமதி கிடைக்கப்பெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

மேலும் இப்பிரதேசத்தின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வெல்லாவெளி பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகி அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் சி.சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா சாணக்கியன் உட்பட உதவிப் பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி தலைமைமை முகாமையளர், மாவட்டத்தின் சகல திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் பிரசன்னமாயிருந்தனர்.





No comments: