News Just In

3/16/2021 11:13:00 AM

மட்டக்களப்பில் “நீர்பாசன செழுமை" தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
"நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக "நீர்பாசன செழுமை" தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களமும் வெல்லாவெளி பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த புது முன்மாரிச்சோலை அணைக்கட்டினை புனர்நிர்மாணம் செய்வதற்கான இத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு திங்கட்கிழமை 15.03.2021 மாலை இடம்பெற்றது.

பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்திக் குழு தலைவருமாகிய சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்திக் குழுவின் பிரதித் தலைவர் பா. சந்திரகுமார், பிரதேச செயலாளர் ஆர். இராகுலநாயகி, உள்ளிட்ட அரச உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பாலையடிவட்டை கிராம பொதுமக்களது பிரசன்னத்திலும் புதுமுன்மாரிச்சோலை அணைக்கட்டின் புனர்நிர்மாண ஆரம்ப நிகழ்வில் திட்டம் தொடர்பான பெயர்ப் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன் திட்டத்திற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.










No comments: