News Just In

3/24/2021 03:48:00 PM

2020 O/L பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்துள்ள செய்தி...!!


நடந்து முடிந்த 2020 சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜில்.எல் பீரிஸ் இன்று தெரிவித்தார்.

ஒரு வருடத்திற்கு மேலாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாத வகையில் கடந்த வருடத்திற்கான க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை இம்மாதம் நடைபெற்று முடிவடைந்தது. இந்த பரீட்சைக்கான வினாபத்திரங்கள் கடுமையானதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்திருக்கும் குற்றாச்சாட்டு தொடர்பில் அமைச்சர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையை ஆகஸ்ட் மாதம் நடத்துவது குறித்து இன்னும் இறுதி தீர்மானம் மேற்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

No comments: