குறித்த பகுதியில் காலை 07 மணி அளவில் புலி வலையில் சிக்குண்டு இருப்பதை கண்டு பொதுமக்களால் 119 என்ற அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து அக்கரப்பத்தனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.
மேலும், அக்கரப்பத்தனை பொலிஸார், நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகளுக்கு குறித்த புலி தொடர்பான தகவலை வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு வந்த வனவிலங்கு அதிகாரிகள், புலியினை மீட்பதற்காக இரந்தனிகல மிருக வைத்தியசாலையின் வைத்தியர்கள் வரைவழைக்கப்பட்டு இரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
No comments: