அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(21)காலை பெரியநீலாவணையைச் சேர்ந்த வல்லிபுரம் திருநாவுக்கரசு என்பருக்கு சொந்தமான கரைவலையில் 20அடி நீளமான கொடுப்புலி மடையன்சுறா மீன் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பிடிக்கப்பட்ட மீனை மனித பாவனைக்கு(சாப்பிடுவதற்கு) பயன்படுத்துவதில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இன்றையைதினம் கடற்கரையில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிப்பதற்கு கரை வலையை வளைந்து கரையில் இருந்து வலையை ஏராளமான இழுத்துள்ளார்கள்.வலையை சிரமத்தின் மத்தியில் இழுத்துள்ளார்கள்.மீனானது இயற்கையாக நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும்,அதனால் கரையை நோக்கி மீன் தாவியிருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றார்கள்.20 அடி நீளமான 1-1/2 (18Cm)அடி உயரமான உடம்பில் புள்ளிகளுடன் காணப்படும் மீனை பிரதேசத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகின்றார்கள்.
No comments: