News Just In

3/01/2020 10:40:00 AM

குழந்தை தேவையில்லை என கருதினால் எம்மிடம் ஒப்படையுங்கள்-தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

தமது குழந்தை தேவையில்லை என கருதுபவர்கள், குறித்த குழந்தையை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்படவுள்ள மத்திய நிலையங்களில் ஒப்படைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சிசுக்கள் கொலை செய்யப்பட்ட நிலையிலும், கைவிடப்பட்ட நிலையிலும் மீட்கப்பட்டிருந்தன.

இவ்வாறான சிசுக்களின் கொலைகளை குறைக்கும் வகையில் சிசுக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான இவ்வாறான புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

குறித்த குழந்தைகளை மத்திய நிலையங்களில் ஒப்படைக்கும் குழந்தையின் பெற்றோரிடம் எந்த காரணங்களும் வினவப்படமாட்டாது எனவும்

பிறந்த குழந்தையில் இருந்து 01 வயது வரையான குழந்தைகளை நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்படவுள்ள 09 மத்திய நிலையங்களில் ஒப்படைக்க முடியும் எனவும் தெரிவித்த அதிகார சபையின் தலைவர்,

குறித்த குழந்தைகள் வளர்ந்ததும் அவர்களை சிறுவர் நிலையங்களுக்கு அல்லது குழந்தைகளை தத்தெடுப்போருக்கு சட்டரீதியாக ஒப்படைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமெனவும் தெரிவித்துள்ளார்.

No comments: