இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை களனி பல்கலைக்கழகத்தின் CCTV கெமராவை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அகற்றியிருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த மாணவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

No comments: