News Just In

2/17/2020 08:19:00 AM

மட்டக்களப்பில் கட்டுத்துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

கட்டுத்துப்பாக்கிகள் இரண்டுடன் மட்டக்களப்பு கொக்குக்குஞ்சிமடு பிரதேசத்தில் இருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இத்துப்பாக்கிகள் கரடியனாறு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இருவரும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டடுள்ளது.

No comments: