News Just In

2/17/2020 12:50:00 PM

யாழ் மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு!

யாழ். மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் இன்று காலை (17.02.2020) யாழ் மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

யாழ்மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் திருமதி. வனிதா மகேசன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

மதகுருமார்களின் ஆசிச் செய்திகளுடன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட அரசாங்கம் அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் வரவேற்பு நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், நலன்விரும்பிகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments: