திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசங்களில் நேற்று இரவு 1840 கிராம் கேரள கஞ்சாவுடன் மூவரைக் கைது செய்ததாக பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
மேலும் நேற்று மாலை பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் கிண்ணியா, முனைச்சேனைச் சந்தியில் வைத்து நபர் ஒருவரை சோதனையிட்டபோது அவரிடமிருந்து 650 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியவுடன் அவரிடம் நடத்திய விசாரணையின் பின்பு அதே பிரதேசத்தில் இரு சக்கரவாகவாகனத்தில் பயணித்தவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவரிடமிருந்து 740 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றப்பட்டது.
அவரிடம் இருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் சூரங்கல் சந்தி பிரதேசத்தில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அங்கிருந்து 450 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரைக் கைது செய்தாக பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களில் முதலாவது நபர் கிண்ணியா-3 குறிஞ்சாகேணியை வசிப்பிடமாக கொண்ட 23 வயது நபர் எனவும், இரண்டாவது நபர் கிண்ணியா- 2 குறிஞ்சாக்கேணியை வசிப்பிடமாக கொண்ட 25 வயதுடையவர் எனவும், கிண்ணியா நடுவூத்து பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 32 வயதுடையவர் எனவும் அவர்கள் தெரிவித்தனர் .
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கிண்ணியா பொலிஸார் வசம் ஒப்படைத்தாக அவர்கள் தெரிவித்தனர்

No comments: