(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்தில் முதியோர் தின நிகழ்வு திங்கட்கிழமை 14ம் திகதி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த முதியோர் தின நிகழ்வினை, மண்முனை மேற்கு பிரதேச செயலகமும், விவேகானந்தா முதியோர் சம்மேளனமும் இணைந்து நடாத்தியது.
இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ப.விஸ்வகோகிலன் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இதன்போது முதியோர்களின் கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றதுடன் பிரதேசத்தின் முதியோர்கள் பொன்னாடை அணிவித்து அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.
No comments: