News Just In

7/28/2026 09:32:00 AM

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் - சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள நான்கு பேர்

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் - சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள நான்கு பேர்



அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், 10 சிறை அதிகாரிகளும் 22 கைதிகளும் கொல்லப்பட்டனர். மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (27) நீதிமன்றத்தின் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மேலும் அரசுத் தரப்பு சார்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் முன்னிலையானது.

அதன்போது, நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சுபுன் மதுசங்க என்ற ஹீனட்டியன சுபுன், அஷான் பெர்னாண்டோ என்ற களு மல்லி, சமீர சம்பத் என்ற பபா மற்றும் ஷேன் திலன் சில்வா ஆகியோர் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களாக தற்போதைக்கு பெயரிடப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

No comments: