News Just In

7/03/2026 03:49:00 PM

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்ட பணம் - அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்ட பணம் - அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்


கடந்த தேர்தல் காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய உகண்டாவில் மறைத்து வைத்துள்ளதாக கூறப்படும் பணத்தை திரும்பப்பெறுவதற்கு எதிர்பார்த்ததை விட அதிக காலம் ஆகும் என்று அரசாங்க தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

இதற்காக அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில்,உகண்டாவில் இலங்கை பணத்தை மறைத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மத்திய வங்கிக்கு இதுவரை எந்த முறைபாடும் வரவில்லை என்றும் நிகழ்வொன்றில் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அத்தகைய முறைப்பாடு வந்தால், அது விசாரணைக்காக பொலிஸாருக்கு அனுப்பப்படும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்

No comments: