News Just In

7/03/2026 04:08:00 PM

தாய்​லாந்​தில் சிறுவன் ஓட்டிய டிரக் மோதி 8 துறவிகள் உயிரிழப்பு!

தாய்​லாந்​தில் சிறுவன் ஓட்டிய டிரக் மோதி 8 துறவிகள் உயிரிழப்பு



 தாய்​லாந்​தின் முக்​தஹான் மாகாணத்தை சேர்ந்த சுமார் 35 துறவிகள், தலைநகர் பாங்காக் நகரில் இருந்து வடகிழக்கே சுமார் 600 கி.மீ. தொலை​வில் நேற்று புனிதப் பயணத்தில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது அவர்​கள் மீது 11 வயது சிறு​வன் ஓட்டி வந்த டிரக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதி​ய​தில் 5 துறவி​கள் அதே இடத்​தில் உயி​ரிழந்​தனர். படு​கா​யம் அடைந்த பல துறவி​கள் மருத்து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் உயி​ரிழந்​தனர். இதனால் உயி​ரிழப்பு 8 ஆக உயர்ந்​தது.

தற்​போது 14 துறவி​கள் சிகிச்​சை​யில் இருப்​ப​தாக மாகாண ஆளுநர் வொராயன் பூன்​னாரத் தெரி​வித்​தார். விபத்​தில் தப்​பிய துறவி​களில் ஒரு​வர் கூறுகை​யில், “அந்த வாக​னம் திடீரென நிலை​ தடு​மாறி, சாலை​யில் இருந்து விலகி வந்து எங்​கள் கூட்​டத்​தின் மீது மோதி​யது” என்​றார். உள்​ளூர் போலீ​ஸார் கூறுகை​யில், “விபத்தை ஏற்​படுத்திய சிறு​வன் தற்​போது போலீஸ் காவலில் இருக்​கிறார். விபத்​துக்​கான காரணம் குறித்து வி​சா​ரணை நடந்து வரு​கிறது” என்​று தெரி​வித்​தனர்​.

No comments: