சாய்ந்தமருது பொது நூலகத்தின் ஏற்பாட்டில், கமு/கமு/ எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தின் தரம் 8 மாணவர்களுக்கான நூலக விழிப்புணர்வு மற்றும் வாசிப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பொது நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் மற்றும் நூலக அபிவிருத்தித் திட்டப் பணிகளை முன்னெடுத்து வரும் ஆர்.எம். ஹஸன் ஆகியோர் மாணவர்களிடையே உரையாற்றினர்.
மேலும், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் (NISD) பல்கலைக்கழக மாணவர்களான எல். நுஸ்லா ரிஸ்னி, எம்.கே.எப். ஸனா அப்ரி மற்றும் ஏ.என்.ஏ. அத்னாப் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியம், நூலகப் பயன்பாட்டின் நன்மைகள் மற்றும் அறிவுத் திறன் வளர்ச்சியில் வாசிப்பின் பங்கு குறித்து விளக்கமளித்தனர்.
நிகழ்வின் போது புரொஜெக்டர் வசதியுடன் பல்வேறு காட்சிப்படுத்தல்கள் இடம்பெற்றதுடன், மாணவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் குழுச் செயற்பாடுகளும் நடத்தப்பட்டன. "வாழ்நாள் முழுவதும் எழுத்தே நண்பன்" எனும் தொனிப்பொருளில் 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளின் ஒரு அங்கமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதற்கும், நூலகங்களை திறம்பட பயன்படுத்தும் பண்பை வளர்ப்பதற்கும் முக்கிய பங்காற்றியதாக கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
No comments: