News Just In

4/29/2026 06:24:00 PM

சுரேஷ் சாலி சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் ஆஜர்! - உடல் நலக் குறைவு தொடர்பில் ஆராய்வு

சுரேஷ் சாலி சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் ஆஜர்!
- உடல் நலக் குறைவு தொடர்பில் ஆராய்வு





அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலி, இன்று (29) காலை கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சுரேஷ் சாலி தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் உடல்நலக் குறைவு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக, அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த கருத்து தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவிற்கமைய, அவர் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: