நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண்கள் சந்தை மற்றும் வீதியோர சிறு வணிக நிலையங்கள் இன்று விரிவான சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இப்பரிசோதனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, நுகர்விற்கு பொருத்தமற்ற மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், வியாபாரிகள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன், உணவு பாதுகாப்பு மற்றும் சுத்தம் தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி, எதிர்காலத்தில் இத்தகைய குறைபாடுகள் இடம்பெறாத வகையில் தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் இணைந்து செயற்பட்டு, பரிசோதனைகளை திறம்பட முன்னெடுத்தனர்.
சுகாதார அதிகாரிகள் தெரிவிப்பதாவது, இத்தகைய சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு, மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும் எனக் கூறினர்.
No comments: