News Just In

4/03/2026 01:26:00 PM

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் போர்டு வழங்கல்

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் போர்டு வழங்கல்

நூருல் ஹுதா உமர்

கல்வி அமைச்சின் உதவியினால், கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு நவீன ஸ்மார்ட் போர்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தேவையுடைய பல பாடசாலைகள் இருந்தபோதிலும், இப்பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். ரிசாத் மற்றும் நிர்வாகத்தினரின் விடாமுயற்சியினால், பல சிரமங்களை கடந்து இந்த வசதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட்டமை, மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதோடு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வி சூழலை உருவாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்விற்காக ஒத்துழைப்புகளை வழங்கிய கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும், பாடசாலை நிர்வாகம் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள புதிய கல்வி வசதி, மாணவர்களின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

No comments: