News Just In

3/24/2026 10:43:00 AM

இன்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தம்!

இன்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தம்!



ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக,இன்று செவ்வாய்க்கிழமை திணைக்களத்தின் அனைத்துப் பொதுச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள பிரதான அலுவலகத்தில் முன்னெடுக்கப்படும் அவசர அடையாள அட்டை விநியோகச் சேவை.

அனைத்து மாவட்ட மற்றும் மாகாண மட்டத்திலான அலுவலகங்களின் சேவைகள்.

அடையாள அட்டை தொடர்பான ஏனைய அனைத்து பொதுச் சேவைகளும் இன்று முன்னெடுக்கப்படமாட்டாது.

திணைக்களத்தின் பிரதான கணினி வலையமைப்பில் (Computer System) ஏற்பட்டுள்ள திடீர் கோளாறே

இந்தத் தீர்மானத்திற்குக் காரணமாகும். இதனைச் சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக

முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று அடையாள அட்டை தொடர்பான தேவைகளுக்காகத் திணைக்களத்திற்கு வருகை தரத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள், தங்களது பயணத்தைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கணினி கட்டமைப்பு வழமைக்குத் திரும்பியதும், சேவைகள் ஆரம்பிக்கப்படும் திகதி குறித்து திணைக்களம் மீண்டும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: