News Just In

2/14/2026 10:03:00 AM

அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டின் பரபரப்புக் காட்சிகள்.. அதிரடியாக களமிறங்கியுள்ள CID - STF அதிகாரிகள்

அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டின் பரபரப்புக் காட்சிகள்.. அதிரடியாக களமிறங்கியுள்ள CID - STF அதிகாரிகள்



அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

குறித்த காட்சியில், சட்டத்தரணி செலுத்தி சென்ற வாகனத்திற்கு முன்னால் தங்கள் வாகனத்தை துப்பாக்கிதாரிகள் இடைமறித்து நிறுத்துகின்றனர்.

பின்னர், காரில் இருந்து முகமூடியுடன் இறங்கிய இரண்டு துப்பாக்கிதாரிகளும் காருக்குள் இருந்த சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி மீது சரமாரி தாக்குதலை நடத்திவிட்டு தப்பி செல்கின்றமை காட்சியில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் சிறப்புப் படை உட்பட பத்து குழுக்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: