
சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL)விதிப்பு முறையில் திருத்தம் கொண்டு வருவது வாகன இறக்குமதி வரிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய வரிகள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது என்று அரசாங்கம் கூறியிருந்தாலும், இந்த தொழில்நுட்ப மாற்றத்தின் மூலம் நுகர்வோர் மீதான வரிச்சுமை இரகசியமாக அதிகரிக்கும் என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.
தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வாகன விலைகள் அதிகரிக்காது, ஏமாறாதீர்கள் தங்கள் வாகனங்களை விற்gனை செய்ய மக்களை பயமுறுத்த முயற்சிக்கிறார்கள். வாகன விலைகள் குறையும் என்று அமைச்சர் கூறுகின்றார்.
தற்போதைய முறையின் கீழ், 2.5% ஆக இருக்கும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி, வருவாயில் 50% மட்டுமே பொருந்தும், நடைமுறையில், இது 1.25% வரியாகும். இருப்பினும், புதிய திட்டத்தின்படி, வரி விதிப்பு விற்பனை மட்டத்திலிருந்து சுங்க நிலைக்கு மாறும், மேலும் 100% விற்று முதலுக்கு 2.5% முழு வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வரி வசூல் முறை
இவற்றில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த 2.5% வரி மதிப்பு கூட்டலின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.மற்றும் 18% மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) என்பது பொதுமக்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு சிக்கலான வரி அதிகரிப்பு என்று இறக்குமதியாளர்கள் சங்கம் கூறுகின்றது.
இருப்பினும், ஏப்ரல் 1, 2026 முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதிய வரி வசூல் முறையின் காரணமாக, வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய மொத்த சுங்க வரி எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்று தொழில்துறை பிரதிநிதிகள் எச்சரிக்கின்றனர்.
இது இறுதியில் வாகனங்களின் விலையை நேரடியாக பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
புதிய வரிகள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது என்று அரசாங்கம் கூறியிருந்தாலும், இந்த தொழில்நுட்ப மாற்றத்தின் மூலம் நுகர்வோர் மீதான வரிச்சுமை இரகசியமாக அதிகரிக்கும் என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.
தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வாகன விலைகள் அதிகரிக்காது, ஏமாறாதீர்கள் தங்கள் வாகனங்களை விற்gனை செய்ய மக்களை பயமுறுத்த முயற்சிக்கிறார்கள். வாகன விலைகள் குறையும் என்று அமைச்சர் கூறுகின்றார்.
தற்போதைய முறையின் கீழ், 2.5% ஆக இருக்கும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி, வருவாயில் 50% மட்டுமே பொருந்தும், நடைமுறையில், இது 1.25% வரியாகும். இருப்பினும், புதிய திட்டத்தின்படி, வரி விதிப்பு விற்பனை மட்டத்திலிருந்து சுங்க நிலைக்கு மாறும், மேலும் 100% விற்று முதலுக்கு 2.5% முழு வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வரி வசூல் முறை
இவற்றில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த 2.5% வரி மதிப்பு கூட்டலின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.மற்றும் 18% மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) என்பது பொதுமக்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு சிக்கலான வரி அதிகரிப்பு என்று இறக்குமதியாளர்கள் சங்கம் கூறுகின்றது.
இருப்பினும், ஏப்ரல் 1, 2026 முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதிய வரி வசூல் முறையின் காரணமாக, வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய மொத்த சுங்க வரி எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்று தொழில்துறை பிரதிநிதிகள் எச்சரிக்கின்றனர்.
இது இறுதியில் வாகனங்களின் விலையை நேரடியாக பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
No comments: