News Just In

2/03/2026 08:41:00 AM

ஷிரந்தி ராஜபக்ச இன்று நிதி மோசடி விசாரணை பிரிவில்! நாமல் ராஜபக்ச சிஐடிக்கு!


ஷிரந்தி ராஜபக்ச இன்று நிதி மோசடி விசாரணை பிரிவில்! நாமல் ராஜபக்ச சிஐடிக்கு!





முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

சிரிலிய சவிய வேலைத்திட்டம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்சவை கடந்த 27 ஆம் திகதி நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் அங்கு முன்னிலையாக இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என அவர் தமது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில், நிதிக்குற்ற விசாரணை பிரிவில் இன்று முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: