News Just In

1/27/2026 09:01:00 PM

ஹிஸ்புல்லாஹ் எம்.பியினால் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி

ஹிஸ்புல்லாஹ் எம்.பியினால் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி


நூருல் ஹுதா உமர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதிஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் நிகழ்நிலை காப்புப் சட்டத்தின் கீழ் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்று (27) நீதவான் நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.

சமூக வலைத்தளத்தில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக எதிராளிகளுக்கு எதிராக பல வழக்குககள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. பாராளுமன்ற உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட ஆறு வழக்குகளும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இவ்வழக்குகளில் எதிராளிகள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான், முஹம்மட் சப்ரின், எம்.ஐ. இயாஸ்டீன், முஹம்மட் ஹனிபா பசில், முஹம்மட் ஜெசிம் ஆகியோர், தோன்றியிருந்தனர்.

No comments: