கிவுல் ஓயா திட்டத்தை எதிர்க்க நாம் அனைவரும் ஒன்று கூட வேண்டும்..!
இன்றைய தினம். சித்தாண்டி சமூக ஒன்றியம் நாடாத்தும் மாபெரும் பொங்கல் விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் சித்தண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத ஆலய முன்றலில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த போது இரா சாணக்கியன் தெரிவிப்பு
தற்போது அரசாங்கம் கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்கின்றது. இதில் வவுனியா மாவட்டத்தில் தமிழர்களுக்கு சொந்தமான கிட்டத்தட்ட 13000 ஏக்கரிற்கும் அதிகமான நிலப்பரப்பினை அழித்து மணலாறு பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்ட 4000 சிங்கள குடும்பங்களுக்கு நீர் வழங்க இத் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
தற்போது அரசாங்கம் கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்கின்றது. இதில் வவுனியா மாவட்டத்தில் தமிழர்களுக்கு சொந்தமான கிட்டத்தட்ட 13000 ஏக்கரிற்கும் அதிகமான நிலப்பரப்பினை அழித்து மணலாறு பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்ட 4000 சிங்கள குடும்பங்களுக்கு நீர் வழங்க இத் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
மேற்படி திட்டம் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ காலத்தில் இத் திட்டங்கள் கொண்டுவர எத்தனிக்கப்பட்ட போது தடுத்து நிறுத்தப்பட்டன. கடந்த ஆட்சிக் காலத்தில் சித்தாண்டியில் மயிலத்தமடு மாதவனை பிரச்சனை காரணமாக பல தமிழ் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கான எதிர்ப்பினை சென்ற ஆண்டுகளில் தனி ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நீதியை நிலை நாட்டும் நோக்கில் இன்றளவிலும் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றேன். இப் பிரச்சனை முற்றுப்பெற்ற விடயமாக காணப்படினும் அது இன்று வரை முடியவில்லை. 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப் பிரச்சனைகள் மீள உருவெடுக்கின்றதோ அதே போல மயிலத்தமடு மாதவனை பிரச்சனையும் உருவெடுக்கும். மிகுந்த சிரமப்பட்டு நாங்கள் மயிலத்தமடு மாதவனை பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்ததை சிலர் மறந்து விட்டனர். ஆனால் இந்த நிலம் சம்மந்தமான போராட்டங்களை நாம் முன்னெடுப்பது பண்ணையாளர்களுக்காகவோ, தனிப்பட்ட குழுவினருக்காகவோ அல்ல மாறாக தமிழினத்துக்காகவே எமது மக்களுக்காகவே. கிவுல் ஓயா திட்டத்தை முழுமையாக முறியடிக்க தமிழ் மக்களாகிய நாம் ஒன்றிணைய வேண்டும். ஒற்றுமையே எமது பலம்.
No comments: