News Just In

12/02/2025 11:05:00 AM

அடித்து கொல்லப்பட்டாரா இம்ரான் கான் : பாகிஸ்தான் அரசின் அறிவிப்பு

அடித்து கொல்லப்பட்டாரா இம்ரான் கான் : பாகிஸ்தான் அரசின் அறிவிப்பு



‘பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார் என என பாகிஸ்​தான் தெக்​ரீக்​-இ-இன்​சாப்​(பிடிஐ) கட்​சி​யின் செனட் உறுப்​பினர் குர்​ராம் ஜீஷன் தெரிவித்துள்ளார்.

இம்​ரான் கான், ராவல்​பிண்​டி​யில் உள்ள சிறை​யில் கொலை செய்​யப்​பட்​டார் என ஆப்​கானிஸ்​தானில் உள்ள சமூக ஊடகங்​களில் கடந்த வாரம் தகவல் பரவியது.

சிறை​யில் உள்ள இம்​ரான் கானை அவரது குடும்​பத்​தினர், அரசி​யல் கட்​சி​யினர் சந்​திக்க கடந்த ஒரு மாதத்​துக்கு மேலாக அனு​மதி அளிக்​கப்​பட​வில்​லை.

இதனால் அவரது சகோ​தரி​கள் சிறை வாசலில் போராட்​டம் நடத்​திய நிரலையில் அவர்​கள் மீது காவல்துறையினர் தாக்​குதல் நடத்​தினர்.

இம்​ரான் கான் உயிரோடு இருப்​ப​தற்​கான ஆதா​ரத்தை வெளி​யிட வேண்​டும் என அவரது மகன் காசிம் கான் கோரிக்கை விடுத்தார்.





இந்த​நிலை​யில், பிடிஐ கட்​சி​யின் செனட் உறுப்​பினர் குர்​ராம் ஜீஷன் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “இம்​ரான் கான் அடிலா சிறை​யில் உயிரோடு இருப்​ப​தாக எங்​களுக்கு பாகிஸ்​தான் அரசு உறுதி அளித்​துள்​ளது.

அவரை தனிமைச்​சிறை​யில் அடைத்து வைத்​து நாட்டை விட்டு வெளி​யேறி அவருக்கு பிடித்​த​மான இடத்​தில் அமை​தி​யாக இருக்​கும்​படி பாகிஸ்​தான் அரசு அழுத்​தம் கொடுத்து வரு​கின்ற நிலையில் இதற்கு இம்​ரான் கான் ஒப்​புக் கொள்ள மாட்​டார்.

இம்​ரான் கானின் புகழை கண்டு பாகிஸ்​தான் அரசு பயப்​படு​வதனால்தான் ​அவரது படம் மற்​றும் காணொளி வெளி​யிட அவர்​கள் அனு​ம​திக்​க​வில்​லை.

கடந்த ஒரு மாத​மாக அவரை குடும்​பத்​தினர் மற்​றும் கட்சி தலை​வர்​கள் சந்​திக்க விடா​மல் அவரை தனிமைச் சிறை​யில் அடைத்து வைத்​திருப்​பது துரதிர்ஷ்டம்.





இது மனித உரிமை மீறல் ஏதோ ஒரு விஷ​யத்​துக்​காக அவருக்கு பாகிஸ்​தான் அரசு அழுத்​தம் கொடுப்​பது​ போல் தெரி​கின்றது.

இம்​ரான் கான் சிறை​யில் இருந்​தா​லும் அவரது செல்​வாக்கு தொடர்ந்து அதி​கரித்து வரு​வதுடன் அவரது பிடிஐ கட்சி பாகிஸ்​தான் இளைஞர்​களிடம் வலு​வாக வேரூன்​றி​யுள்​ளது.

அவரது கொள்கை பல தரப்​பினரை ஈர்த்​துள்​ளது, பிடிஐ கட்​சிக்கு சிறந்த எதிர்​காலம் உள்​ள நிலையில் இம்​ரான் கான் சிறை​யில் இருக்​கும் படம் வெளிவந்​தால் அது மக்​களிடையே மிகப் பெரிய தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்​ப​தால் அவரது ​புகைப்படத்தை வெளி​யிட பாகிஸ்​தான் அரசு அனு​ம​திக்​க​வில்​லை” என அவர் தெரிவித்துள்ளார்

No comments: