
கருணாவின் முக்கிய சகாக்களில் ஒருவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளில் ஒருவருமான இனிய பாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றுமொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிய பாரதியை இன்று கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று(6) அதிகாலை 5.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், முனைக்காடு பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
முனைக்காடு பகுதியில் இனிய பாரதி தங்கியிருந்த பிரதேசத்தை இன்று அதிகாலை சுற்றி வளைத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
குறித்த கைதானது இனிய பாரதியின் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இளைஞர் யுவதிகளை கடத்தி காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளடங்கலாக முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் கெப்டன் சந்திரநேரு படுகொலை தொடர்பில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றுமொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிய பாரதியை இன்று கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று(6) அதிகாலை 5.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், முனைக்காடு பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
முனைக்காடு பகுதியில் இனிய பாரதி தங்கியிருந்த பிரதேசத்தை இன்று அதிகாலை சுற்றி வளைத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
குறித்த கைதானது இனிய பாரதியின் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இளைஞர் யுவதிகளை கடத்தி காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளடங்கலாக முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் கெப்டன் சந்திரநேரு படுகொலை தொடர்பில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments: