News Just In

6/11/2025 01:43:00 PM

அல்- கரீம் பெளண்டேஷன் அமைப்பின் சாதனையாளர் பாராட்டு விழா

அல்- கரீம் பெளண்டேஷன் அமைப்பின் சாதனையாளர் பாராட்டு விழா




நூருல் ஹுதா உமர், நிப்ராஸ் லத்தீப்
நற்பிட்டிமுனை அல்- கரீம் பெளண்டேஷன் அமைப்பின் சாதனையாளர் பாராட்டு விழா இன்று (10) சவளக்கடை றோயல் காடன் வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.

அமைப்பின் பணிப்பாளர் சி.எம். ஹலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறப்பினருமான எம்.ஏ.அஷ்ரப் தாஹிர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.

இதில் கல்வி ரீதியில் சமூகத்தில் முன்னேற்றம் கண்ட மாணவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே. அப்துல் றஷாக் (ஜவாத்), அல்- கரீம் பெளண்டேஷன் அமைப்பின் தவிசாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சீ.எம். முபீத், ஓய்வு பெற்ற வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் எஸ். முஹம்மட் அலி ஜின்னா உள்ளிட்ட ஊரின் முக்கியஸ்த்தர்கள், அதிபர்கள் ஆசிரியர்கள், பொது மக்களெனப் பலரும் கலந்து கொண்டனர்

No comments: