News Just In

6/12/2025 12:22:00 PM

மர்ஹூம் நூர்தீன் மஷூரின் 15 ஆவது ஹஜ் விழாவின் இறுதி நாள் நிகழ்வு!

மர்ஹூம் நூர்தீன் மஷூரின் 15 ஆவது ஹஜ் விழாவின் இறுதி நாள் நிகழ்வு



நூருல் ஹுதா உமர்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான மர்ஹூம் நூர்தீன் மஷூரின் 15 ஆவது ஹஜ் விழாவின் இறுதி நாள் நிகழ்வு நேற்று (10) மன்னார் பிரதேச சபை முன்னாள் தலைவர் இஸ்மாயில் இஸ்ஸதீனின் ஏற்பாட்டில் சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சட்டத்தரணி லுக்மான் சஹாப்தீன் தலைமையில் எருக்கலம் பிட்டியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டதுடன் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக், அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன், உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

No comments: