News Just In

4/23/2025 10:07:00 AM

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக எனக்கு எதிரான வழக்கு.!இரா சாணக்கியன்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக எனக்கு எதிரான வழக்கு. பிள்ளையானால்..!



பிள்ளையானை கைது செய்து விசாரித்தால் பல உண்மைகளை கண்டரியலாம் என 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தனது உரையில் தெரிவித்திருந்தேன்.

அத்துடன், கடந்த 2023 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டு வெடிப்பின் (Easter attack) நான்காவது ஆண்டு பூர்தியை முன்னிட்டு நீதி கோரி இடம்பெற்ற நிகழ்வில் அசாத் மௌலான ஐ.நாவிற்கு சமர்பித்த அறிக்கையை நாம் சமர்ப்பித்திருந்தோம். அவ்வாறு சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டிருந்தது.நே 

இந்நிலையில், பிள்ளையானுக்கும் ஈஸ்டர் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக எமது அறிக்கை கூறியதன் அடிப்படையில் எனக்கு எதிராக மான நஷ்டம் கோரி பிள்ளையானால் வழக்கு எனக்கு எதிராக தொடரப்பட்டது.

நேற்றைய தினம் கல்கிசை மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இவ் குறித்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

No comments: