தமிழீழ இயக்கத்தின் தலைவரை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம்!
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழுக் கூட்டம் திருகோணமலையில் புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் தலைவர் விந்தன் கனகரட்ணத்தை கட்சியில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் முக்கியஸ்தர்கள் முயற்சித்ததை அடுத்து திருகோணமலை கூட்டத்திற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரெலோவின் யாழ்.மாவட்ட பிரமுகர்களான குருசுவாமி சுரேன் மற்றும் விந்தன் கனகரட்ணம் ஆகியோருக்கு இடையிலான பனிப்போர் தற்போது வெளிப்படையான மோதலாக வெடித்துள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் யாழ். டியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த விந்தன், லைகா நிறுவனத்துடன் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டு, ரெலோவின் சுரேனுக்கும் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
யாழ் மாவட்டத்தில் ரெலோ சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் விந்தன் கனகரட்ணத்தை களமிறக்க ரெலோ தலைமை முடிவு செய்திருந்த போதிலும் அது இறுதியில் நடக்கவில்லை. சுரேன் தலையீட்டால் விந்தனின் பெயர் வெட்டப்பட்டதாக விந்தன் தரப்பு குற்றம் சாட்டுகிறது.
கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கட்சி உறுப்பினர்களை சமமாக நடத்தாமல் சுரேன் தாளத்துக்கு ஆடுவதாக கடந்த சில நாட்களாக விமர்சனம் எழுந்துள்ளது.
11/23/2024 10:49:00 AM
தமிழீழ இயக்கத்தின் தலைவரை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: