News Just In

9/05/2024 01:15:00 PM

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்களின் சர்வமத கலாச்சார நிகழ்வுகள்!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய தரம் 04 மாணவர்களின் "பல்வேறு சமய, கலாச்சார ஆடைகளையும் பண்டிகைக்கால உணவுகளையும் அறிந்து கொள்வோம்" எனும் கருப்பொருளுடன் கூடிய நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ.அப்துல் றஸாக் அவர்களின் தலைமையில் ஆரம்பப் பிரிவு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பாடசாலையின் ஆரம்பப் பிரிவிற்கான உதவி அதிபரும் பகுதித் தலைவருமான எஸ்..ஜுனைதீன் அவர்களின் வழிகாட்டலில் தரம் 04 வகுப்பாசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நெறிப்படுத்தலில் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் மாணவர்களின் பூரண ஈடுபாட்டுடன் சிறப்பாக இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

No comments: