News Just In

8/18/2024 11:34:00 AM

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மாணவி நிஸ்கா வாசிப்புப் போட்டியில் கல்முனை கல்வி மாவட்டத்தில் முதலிடம்!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
2024 அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியில் கல்முனை கல்வி மாவட்டத்தில் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலய மாணவி கே.எப்.நிஸ்கா முதலாம் பிரிவு வாசிப்பு போட்டியில் முதலாமிடத்தைப் பெற்று கிழக்கு மாகாணமட்டபோட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சாதனை படைத்த மாணவியையும்,தமிழ் பாட ஆசிரிகைகளான எம்.ஐ.நஜீமா,ஹைருல் குலாசா மற்றும் வகுப்பாரியரான எஸ்.எல்.நவாஹிர் ஆகியோரை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சிறந்த வழிகாட்டல்களை வழங்கிய இணைப்பாட பொறுப்பு அதிபர் எம்.எப்.றிஸ்வி ஹாதீம் ,பிரதி அதிபர் சுஜான் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இப் பாடசாலை 2024 இல் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பல வரலாற்று வெற்றிகளை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments: