News Just In

8/18/2024 11:29:00 AM

புளூ மெளண்டன் ரீ 10 சம்பியன்ஸ் கிண்ணம்-2024" பாலமுனை அல் அறபா அணி வசமானது



(அஸ்ஹர் இப்றாஹிம்)
நிந்தவூர் புளூ மெளண்டன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர் பொது விளையாட்டி மைதானத்தில் இடம்பெற்ற புளூ மெளண்டன் சம்பியன் சம்பியன் கிண்ண மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் சம்பியன் கிண்ணத்தையும், 25 ஆயிரம் பணப்பரிசையும் பாலமுனை அல் அறபா விளையாட்டுக் தனதாக்கி கழகம் கொண்டது.

இந்த சுற்றுப் போட்டியில் நிந்தவூர், மருதமுனை, பாலமுனை, அக்கரைப்பற்று, கல்முனை, இறக்காமம்ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 17 அணிகள் பங்குபற்றி இருந்தன.

சுற்றுப்போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு பாலமுனை அல் அறபா விளையாட்டுக்கழகமும், நிந்தவூர் புளூ மெளண்டன் விளையாட்டுக்கழகமும் தெரிவாகியிருந்தன.



No comments: